Monday, October 21, 2013

பசி வந்தால் பத்தும் பறக்கும்

சிலர் பசியே இல்லை. அதனால், சாப்பிடவே முடியவில்லை'' எனப் புலம்பியபடி இருப்பார்கள். பசி எடுக்கவில்லை என்பதற்கு மிக முக்கியக் காரணம் சரியான செரிமானம் இல்லாமைதான். உடலில், உணவுச் சத்துக்கள் குறைந்துவருகின்றன என்பதை உணர்த்த செரிமான மண்டலம் காட்டும் அறிகுறியே... பசி.

உணவுச் சத்துக் குறையும்போது மட்டும் அல்லாது, உணவின் வாசனையை நுகரும்போதோ, உணவுகளை வகைவகையாகப் பார்க்கும்போதோ, ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்போதோ பசி ஏற்படும்....
பசி குறைந்தாலோ... இல்லை கடுமையாகப் பசி எடுத்தாலோ, அது நோயின் அறிகுறி என்பதை உணருங்கள். சர்க்கரை நோய், தைராய்டு சுரப்பி அதிகமாகச் சுரப்பது இவற்றின் காரணமாக அதிகமானப் பசி இருக்கும். இந்தப் பாதிப்புகள் இருக்கும்பட்சத்தில் நீங்கள் எவ்வளவுதான் சாப்பிட்டாலும், உடல் பருமன் அதிகரிக்காது. இன்னும் சொல்லப்போனால், பலருக்கு உடல் எடை குறையவும் செய்யும்.

காய்ச்சல், புற்றுநோய், குடல் புழுக்கள், புகைப்பிடித்தல், மதுப் பழக்கம் உள்ளிட்ட காரணங்களால் பசி உணர்வு குறையும்.

பசியின்மை ஏற்பட செரிமான மண்டலம் மட்டுமே காரணம் இல்லை. மனம் சம்பந்தப்பட்ட விஷயங்களாலும் பசியின்மை ஏற்படலாம். அதனால், பசியின்மை ஏற்பட்டால் அது செரிமானப் பிரச்னையாலா அல்லது மனரீதியான பிரச்னையாலா என்பதை உடனடியாக ஆராய்ந்து அறிந்துகொள்வது நல்லது. மனதுக்குள் ஆயிரமாயிரம் போராட்டங்களையும் குழப்பங்களையும் வைத்துக்கொண்டு நீங்கள் ஜீரணத்துக்காக சிகிச்சை எடுத்தால், அதனால் எவ்விதத் தீர்வும் கிடைக்காது.
சிலர் வீம்புக்குச் கோவித்துக்கொண்டு சாப்பிடாமல் இருப்பார்கள் அவர்களை வேறு வகையில் தான் சரிசெய்யவேன்ன்டும் என்பதையும் நான் சொல்லவேன்டுமா என்ன ?

No comments:

Post a Comment