Monday, October 21, 2013

வெளியில் போய்விட்டு வீட்டுக்கு வந்தவுடன் 2 தேக்கரண்டி சமையல் சோடா, அரிசிமாவு, ஒரு தேக்கரண்டி அரைத்த எலுமிச்சைத் தோல் மூன்றையும் கலந்து முகம், கை, கால்களில் தடவி 15 நிமிடம் கழித்து ஒரு துணியால் மேல்நோக்கி துடைத்துவிடுங்கள். சருமத்தில் படிந்துள்ள அழுக்குகள் இருந்த இடம் தெரியாமல் போகும். சருமம் பளபளக்கும்.

மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும். பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.

ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும்.

பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்

No comments:

Post a Comment